Published : 08 Nov 2021 01:09 AM
Last Updated : 08 Nov 2021 01:09 AM

மழையால் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு

சென்னை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்துவருவதால் தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில பாடத்தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மாவெளியிட்டஅறிவிப்பு: தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (நவ.8) தொடங்கி நவம்பர் 12-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த தேர்வுக்கான அனைத்துவித ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

தமிழ், ஆங்கிலத் தேர்வுகள்

இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்துவருகிறது. இதன்காரணமாக நவ.8, 9-ம் தேதிகளில் நடைபெறவிருந்த தமிழ், ஆங்கிலம் பாடத்தேர்வுகள் மட்டும் தள்ளிவைக்கப்படுகின்றன. இதர கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களின் தேர்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நாட்களில் (நவ.10, 11, 12) நடைபெறும்.

தற்போது ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மாற்றுதேதிகள் விரைவில் வெளியிடப்படும். கூடுதல் விவரங்களை தனித்தேர்வர்கள் தேர்வுத்துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x