Published : 06 Sep 2021 03:14 AM
Last Updated : 06 Sep 2021 03:14 AM

தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இணையவழியில் வகுப்புகள் தொடக்கம்

சென்னை

தமிழகத்தில் கரோனா பரவல்காரணமாக மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் செப்.1-ம் தேதி முதல்சுழற்சி முறையில் திறக்கப்பட்டன.

அதன்படி, கல்லூரி வளாகங்களில் 50 சதவீதம் மாணவர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்றும் இளநிலை பட்டப் படிப்புகளில் 2 மற்றும் 3-ம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும் என்றும் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளில் உத்தரவிட்டு இருந்தது. இதற்கிடையே தனியார்கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இதன் காரணமாக முதலாமாண்டு மாணவர்களுக்கு இணையவழியில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக தனியார் கல்லூரி பேராசிரியர்கள் சிலர் கூறும்போது, “தமிழகத்தில் 50 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவேண்டும் என்பதால், முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தத் தனியார் கல்லூரிகளில் இடவசதி இல்லை. எனவே அவர்களுக்கு இணையவழியில் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு அனுமதி வழங்கிய பின்னர் நேரடி வகுப்புகள் நடத்தப்படும்” என்றனர்.

அதேநேரத்தில் அரசுக் கல்லூரிகளில் 72% மாணவர்சேர்க்கை மட்டுமே முடிந்துள்ளதால், அங்கு முதலாமாண்டு மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகளைத் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x