Published : 23 Jul 2021 07:11 AM
Last Updated : 23 Jul 2021 07:11 AM

வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் ஆசிரியைகள்

கரோனா ஊரடங்கால் தமிழ்நாட்டில் 2-வது ஆண்டாகக் பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடக்கின்றன.

நீலகிரி மாவட்டத்தில் உள்ளபெரும்பாலான மலைக் கிராமங்களில் போதிய தொலைதொடர்பு வசதிகள் இல்லாத காரணத்தால், ஆன்லைன் வகுப்புகள் மூலம் வகுப்புகள் நடத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்நிலையில், கோத்தகிரி அருகில் உள்ள கட்டபெட்டு பாக்கியாநகர் அரசு நடுநிலைப் பள்ளியின்தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள், பள்ளிகள் திறக்கட்டும் என காத்திருக்காமல், மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம்கற்பித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக பள்ளியின் தலைமையாசிரியர் வசந்தா கூறியதாவது: பாக்கியா நகர் பள்ளியில் எல்.கே.ஜியில் இருந்து 8-ம் வகுப்பு வரை 100 குழந்தைகள் படிக்கின்றனர். 7 ஆசிரியர்கள் பணிபுரிகிறோம். மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் தோட்டத் தொழிலாளர்கள்.

இவர்களுக்குப் படிப்பை தடையில்லாமல் கொடுக்க வேண்டும் என தொடர்ந்து ஆன்லைன் வகுப்புநடத்துகிறோம். கல்வி தொலைக்காட்சியையும் பார்க்க வைக்கிறோம். இது மட்டுமின்றி நாங்களேமாணவர்களின் வீடுகளுக்கு நேரில்சென்று பாடம் நடத்துகிறோம். வீட்டுப் பாடங்கள் கொடுத்து,மாணவர்கள் எழுதுவதை உறுதிப்படுத்துகிறோம். மாணவர்கள் பாடங்களை மறக்காமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x