Published : 07 Apr 2021 03:15 AM
Last Updated : 07 Apr 2021 03:15 AM

பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று விடுமுறை

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதிதேர்வுகள் ஏற்கெனவே ரத்து செய்யப் பட்டு விட்டன. எனவே, அவர்களுக்கும் இதர வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் ஏதும் நடைபெறவில்லை. இருப்பினும் அனைத்து வகுப்பு ஆசிரியர்களும் தினமும் பள்ளிக்கு சென்று வருகிறார்கள்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் நேற்றுவாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் பணிக்கு சென்ற ஆசிரியர்கள் பணி முடிவடைந்து வீட்டுக்கு செல்ல நள்ளிரவுஅல்லது அதிகாலை ஆகிவிடும். எனவே, வாக்குப்பதிவுக்கு அடுத்த நாள் (ஏப்.7) விடுமுறை விட வேண்டும் என்று ஆசிரியர்கள் ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், அவர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழகம் முழுவதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று (புதன்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்தந்தமாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நேற்று தகவல் அனுப்பி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x