Last Updated : 01 Jan, 2021 07:52 AM

 

Published : 01 Jan 2021 07:52 AM
Last Updated : 01 Jan 2021 07:52 AM

கர்நாடகாவில் 10, 12-ம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறப்பு

கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தொடர்ந்து வைரஸ் வேகமாக பரவியதால் ‌2020-21ம் கல்வி ஆண்டுக்காக கடந்த‌ ஜூன் மாதத்தில் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படவில்லை.

கர்நாடகாவில் கரோனா பரவல் சற்று குறைந்ததால் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கடந்த நவம்பர் 18-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டன. மாணவர் வருகை குறைந்து காணப்பட்டாலும், தொடர்ந்து வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நெருங்குவதால் ஜனவரியில் கட்டாயம் பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து ஜனவரி 1 முதல் பள்ளிகளை திறக்க முதல்வர் எடியூரப்பா ஒப்புதல் அளித்தார்.

இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் கூறும்போது, "9 மாதங்களுக்கு பின் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மாணவர்கள் நேரிலும் ஆன்லைன் மூலமாகவும் பாடங்களை கற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வரும் மாணவர்களே வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஒரு மாதத்துக்கு 15 நாட்கள் மட்டுமே பள்ளிகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x