Published : 11 Sep 2020 05:40 PM
Last Updated : 11 Sep 2020 05:40 PM
யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டப்படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
''தமிழ்நாடு அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சென்னை மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் 2020-21 ஆம் ஆண்டுக்குடிற்கு பி.என்.ஒய்.எஸ். (BNYS) மருத்துவப் பட்டப்படிப்பில் அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் மேல்நிலைப் பள்ளித் தேர்வில் முதன் நேர்வில் அறிவியல் பாடங்களை எடுத்துத் தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து 03.08.2020 அன்று முதல் வரவேற்கப்படன.
விருப்பப் படிவத்துடன் கூடிய விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பினை எங்களது அலுவலக வலைதளமான www.tnhealth.tn.gov.in என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய மற்றும் விண்ணப்பப் படிவம் பெறக் கடைசி நாட்கள் ஆக.28 மற்றும் ஆக.31-ல் இருந்து 12.09.2020 முடிய மாலை 05.00 மணி மற்றும் 15.09.2020 முடிய மாலை 05.30 மணி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
1. விருப்பப் படிவத்துடன் கூடிய விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பினை பதிவிறக்கம் செய்ய கால நீட்டிப்பு செய்யப்பட்ட கடைசி நாள் :
12.09.2020 முடிய மாலை 05.00 மணி வரை
2. பூர்த்தி செய்யப்பட்ட விருப்பப் படிவத்துடன் கூடிய விண்ணப்பப் படிவம் தபால் / கூரியர் சேவை வாயிலாக பெறவோ, நேரில் சமர்ப்பிக்கவோ கால நீட்டிப்பு செய்யப்பட்ட கடைசி நாள்: 15.09.2020 முடிய மாலை 05.30
கூடுதல் விவரங்களுக்கு: www.tnhealth.tn.gov.in என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.''
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT