Published : 21 Aug 2020 07:37 AM
Last Updated : 21 Aug 2020 07:37 AM

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு; சான்றிதழ் பதிவேற்றம் செய்ய ஆக.24 வரை கால அவகாசம்

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 24-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். இதற்கான ஆன்லைன்பதிவு ஜுலை 16-ல் தொடங்கி ஆகஸ்ட் 15-ல் முடிவடைந்தது.

ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 834 பேர் விண்ணப்பம் செய்திருக்கின்றனர். சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கான கடைசிநாள் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், சான்றிதழ் பதிவேற்றம் செய்வதற்கான கடைசிநாள் ஆகஸ்ட் 24-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடுபொறியியல் மாணவர் சேர்க்கைச்செயலாளர் டி.புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x