Published : 17 Aug 2020 07:04 AM
Last Updated : 17 Aug 2020 07:04 AM

பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க 1.61 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

சென்னை

நடப்பு ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க 1.61 லட்சம்மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு இணையவழியில் கடந்த ஜூலை 15-ம்தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.

கடந்த ஆண்டை விட அதிகம்

பொறியியல் கலந்தாய்வுக்கு 1.61 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டைவிட அதிகமாகும். 2019-ம் ஆண்டில்1,33,116 மாணவர்கள் விண்ணப் பித்து இருந்தனர்.

ஆக.20-க்குள் சான்றிதழ் பதிவேற்றம்

பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்த மாணவர்கள் தங்களின் சான்றிதழ்களை ஆகஸ்ட் 20-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். தொடர்ந்து கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்பதற்கான சம வாய்ப்பு எண்கள் ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியிடப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக தொழில்நுட்பக் கோளாறுகாரணமாக கலந்தாய்வுக்குரியஇணையதளத்தில் சரிவர விண்ணப்பிக்க முடியவில்லை எனமாணவர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x