Published : 20 May 2020 07:17 AM
Last Updated : 20 May 2020 07:17 AM
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘டிஹெச்ஐ ஃபவுண்டேஷன்’ சார்பில் பள்ளி மாணவர்களுக்கான ‘லிட்டில் ஃபார்மர்’ எனும் இணையவழி விவசாய பயிற்சி 2-வது முகாமில் பங்கேற்க ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பள்ளிமாணவர்களுக்காக ‘இந்து தமிழ்திசை’ நாளிதழ் இணையம் வழியே பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில், ‘டிஹெச்ஐ ஃபவுண்டேஷன்’ உடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான ‘லிட்டில் ஃபார்மர்’ எனும் இணையவழி விவசாய பயிற்சி முகாம் மே 14 முதல் 17 வரை 4 நாட்கள் நடைபெற்றன.
இந்த முகாமில், வீட்டுத் தோட்டம் அமைத்தல், இயற்கை விவசாய அறிமுகம், விவசாய வகைகளும் கூறுகளும், சமையலறை விவசாயம், விவசாய பயிற்சிகள் குறித்துவிளக்கப்பட்டன. இதில், 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவ,மாணவிகளும் பெற்றோரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்க முடியாமல் போன மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று 2-வது பயிற்சி முகாம் விரைவில் நடைபெறவுள்ளது.
3 நாட்கள் நடைபெறவுள்ள இந்த முகாமில் ‘டிஹெச்ஐ ஃபவுண்டேஷன்’ நிறுவனரும் வேளாண் அறிஞருமான டாக்டர் திவ்யா வாசுதேவன் கலந்துகொண்டு விவசாயம் தொடர்பான ஆலோசனைகளை வழங்குகிறார். இம்முகாமில்பங்கேற்க செல்போன் இருந்தால்போதுமானது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் https://connect.hindutamil.in/agricamp.php இணையதளத்தில் ரூ.249/- கட்டணம் செலுத்தி பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு 9003966866 என்ற செல்பேசி எண்ணைத் தொடர்புகொள்ளவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT