Published : 16 May 2020 07:15 AM
Last Updated : 16 May 2020 07:15 AM

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு​ மாணவர்கள் படிக்கும் பள்ளியிலேயே தேர்வு மையம்-​​ கல்வித் துறை அதிகாரிகள் தகவல்

​சென்னை​

10-ம் வகுப்பு பொதுத்தேர்வைமாணவர்கள் அவரவர் பள்ளியில்எழுதும் வகையில் தேர்வு மையங்களை அமைக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.​​

ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுஜூன் 1 முதல் 12-ம் தேதிவரைநடைபெற உள்ளன. அரசின் இந்தமுடிவுக்கு பல்வேறு தரப்பினர்கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேநேரம், முறையான பாதுகாப்பு அம்சங்களுடன் தேர்வுகளை நடத்த கல்வித் துறை தீவிரம் காட்டி வருகிறது.​​

இந்நிலையில் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வி முதன்மைச் செயலர் தீரஜ் குமார்,காணொலிக் காட்சி வாயிலாக, துறை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், மாணவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே தேர்வுமையங்களை அமைக்க முடிவுஎடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.​இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:​

கரோனா அச்சுறுத்தலால் தேர்வின்போது தனிநபர் இடைவெளியை மாணவர்கள் பின்பற்ற வேண்டும்.​​ இதனால், ஒரு தேர்வு அறையில் 10 மாணவர்களை மட்டுமே அனுமதிக்கவும், அதற்கேற்ப மாணவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே தேர்வு மையத்தை அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

மாணவர்களை தேர்வு மையத்துக்கு அழைத்துவர பேருந்து வசதிஏற்படுத்தப்படும். இதற்கு மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பான அறிவிப்பை ஓரிரு நாட்களில்அமைச்சர் வெளியிடுவார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x