Published : 27 Apr 2020 12:08 PM
Last Updated : 27 Apr 2020 12:08 PM

மாணவர்களின் பிரச்சினைகள்: பெற்றோர்களுடன் இணையத்தில் கலந்துரையாடும் ரமேஷ் பொக்ரியால்

ஆன்லைன் வகுப்புகள், உளவியல் பிரச்சினைகள் உள்ளிட்ட மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கலந்துரையாட உள்ளார்.

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையறையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை மத்திய, மாநில அரசுகள் அறிமுகப்படுத்தின. அதில் சிக்கல்கள், பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதாகப் புகார் எழுந்தது. வீட்டிலேயே இருப்பதால் மாணவர்கள் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம் இன்று (ஏப். 27) இணையம் வழியாகக் கலந்துரையாட உள்ளார். ஆன்லைன் வகுப்புகள், உளவியல் பிரச்சினைகள் உள்ளிட்ட மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து இதில் பேசப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ''பெற்றோர்களே, உங்கள் குழந்தைகளின் கல்வி, உளவியல் நலன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து உங்களுடன் நேரலையில் பேச உள்ளேன். பேசுவோம்'' என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் ட்விட்டர் பக்கத்தில் #EducationMinisterGoesLive என்ற ஹேஷ்டேகுடன் பெற்றோர்கள் தங்களின் கேள்விகள், சந்தேகங்களை முன்வைக்கலாம். இந்த நேரலை இன்று மதியம் 1 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x