Published : 21 Mar 2020 07:33 AM
Last Updated : 21 Mar 2020 07:33 AM

பிளஸ் 2 உயிரியல், வணிகக் கணிதம் தேர்வு கடினம்

சென்னை

தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற உயிரியல், வணிகக் கணிதம் மற்றும் புள்ளியல் பாடங்க ளின் வினாத்தாள்கள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித் தனர். குறிப்பாக 1 மற்றும் 3 மதிப் பெண் பகுதியில் பல்வேறு கேள் விகள் மறைமுகமாகக் கேட்கப்பட் டதால் மாணவர்கள் சிரமப்பட் டனர். இதனால் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறுபவர்களின் எண் ணிக்கை சரியும் என எதிர்பார்க் கப்படுகிறது. அதேநேரம், தாவர வியல் பாடத்தில் ஒரு மதிப்பெண் வினா தவிர இதர கேள்விகள் எளிதாக இருந்ததாக ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற் கிடையே பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும் மார்ச் 24-ம் தேதியுடன் முடிவடைகின்றன.

நிறைவு நாளில் வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தேர் வுகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x