Published : 10 Mar 2020 11:08 AM
Last Updated : 10 Mar 2020 11:08 AM

பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் அதிகரிக்கும் காலியிடங்கள்: மாணவர் சேர்க்கையைக் குறைக்க உத்தரவு

122 பொறியியல் கல்லூரிகள் மற்றும் 155 பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையைப் பாதியாகக் குறைக்க ஏஐசிடிஐ உத்தரவிட்டுள்ளது.

மாறி வரும் கால சூழலில் பொறியியல் படிப்பின் மீதான ஆர்வம் குறைந்துகொண்டே வருகிறது. பொறியியல் துறைக்கான வேலைவாய்ப்பும் குறிப்பிடத்தக்க அளவிலேயே இருக்கிறது. இதனால் தமிழ்நாடு முழுவதிலும் பொறியியல் படிப்புக்கான காலி இடங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருந்தும் அவற்றில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் சுமார் 10 சதவீத இடங்களே நிரம்பியுள்ளன. முதன்மைப் பாடப் பிரிவுகளிலும் இதே சூழல் நிலவுகிறது.

சமீபத்தில் ஏஐசிடிஐ நடத்திய ஆய்வில், தனியார் கல்லூரிகளில் காலியிடங்கள் அதிகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், 122 பொறியியல் கல்லூரிகள் மற்றும் 155 பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை 50 சதவீதமாகக் குறைக்க ஏஐசிடிஐ உத்தரவிட்டுள்ளது.

இனி வரும் கல்வியாண்டில் இருந்து இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று ஏஐசிடிஐ உத்தரவிட்டுள்ளது. சில கல்லூரிகளில் மாணவர் காலியிடங்கள் மேலும் குறையும் பட்டத்தில் அவற்றை மூடவும் ஏஐசிடிஐ பரிந்துரைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x