Published : 27 Feb 2020 11:33 AM
Last Updated : 27 Feb 2020 11:33 AM
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கல்வி குறித்து எழுப்பட்ட கேள்விகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கோவிந்த் சிங் டோட்டாசரா கூறியதாவது:
கடந்த ஆட்சியில் கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தை (ஆர்டிஇ)மீறி, 22 ஆயிரம் தொடக்கபள்ளிகள் மூடி இணைக்கப்பட்டன. இதனால் 19,754 பள்ளி கட்டிடங்கள் காலியாக உள்ளன. எனவே, ஆர்டிஇ விதிப்படி 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருக்கும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். மேலும் கூடுதலாக புதிய தொடக்கப் பள்ளிகளும் திறக்கப்படும்.
இவ்வாறு கோவிந்த் சிங் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT