Published : 27 Feb 2020 11:33 AM
Last Updated : 27 Feb 2020 11:33 AM

ராஜஸ்தானில் மூடிய 19 ஆயிரம் பள்ளிகள் மீண்டும் திறப்பு?

ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கல்வி குறித்து எழுப்பட்ட கேள்விகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கோவிந்த் சிங் டோட்டாசரா கூறியதாவது:

கடந்த ஆட்சியில் கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தை (ஆர்டிஇ)மீறி, 22 ஆயிரம் தொடக்கபள்ளிகள் மூடி இணைக்கப்பட்டன. இதனால் 19,754 பள்ளி கட்டிடங்கள் காலியாக உள்ளன. எனவே, ஆர்டிஇ விதிப்படி 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருக்கும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். மேலும் கூடுதலாக புதிய தொடக்கப் பள்ளிகளும் திறக்கப்படும்.

இவ்வாறு கோவிந்த் சிங் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x