Published : 26 Feb 2020 09:52 AM
Last Updated : 26 Feb 2020 09:52 AM

பள்ளிக் கல்வித்துறை திட்டங்கள்: மத்திய குழுவினர் நேரடி ஆய்வு

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை நிதியுதவியின் மூலம் தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் மூலம் புதிய வகுப்பறைகள் கட்டுதல், தகவல் தொழில்நுட்ப வகுப்பறைகள், ஸ்மாா்ட் வகுப்பறைகள் உள்ளிட்டபல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் நலத் திட்டங்கள், மத்திய அரசின் நிதியுதவி மாணவா்களுக்கு எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக, மனிதவள மேம்பாட்டுத் துறையின் பள்ளிக் கல்வித் துறை பொருளாதார ஆலோசகா் ரஜிப் குமாா் சென் தலைமையிலான அதிகாரிகள் குழுவினா் திங்கள்கிழமை சென்னை வந்தனா்.

கல்வித் தொலைக்காட்சி, க்யூ.ஆர்குறியீட்டைப் பயன்படுத்தி தீக் ஷா செயலி மூலம் மாணவா்கள் கல்விகற்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மத்திய குழுவினருக்கு தமிழக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x