Published : 21 Feb 2020 10:23 AM
Last Updated : 21 Feb 2020 10:23 AM

தென் கொரிய நகரில் பரவும் கரோனா வைரஸ்: மேயர் எச்சரிக்கை

சியோல்

தென் கொரியாவின் தயேகு நகரத்தில் வசிக்கும் 25 லட்சம் மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேயர் க்வோன் யங்-ஜின் கூறுகையில், “நகரத்தின் தென்கிழக்கு பகுதிகளில் கூடுதலாக 35 பேர் புதிய கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் வீட்டுக்குள் இருந்தாலும் சுவாச முகமூடி அணிந்து கொள்ளுங்கள். நோய் பாதிப்பில் இருந்து நகர மக்களை பாதுகாப்பதற்கு சுகாதார கட்டமைப்பைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x