Published : 18 Feb 2020 10:02 AM
Last Updated : 18 Feb 2020 10:02 AM
காயத்தில் இருந்து மீண்டுள்ள இந்திய டென்னிஸ் நட்சத்திரமான சானியா மிர்சா துபாய் ஓபன் டென்னிஸ் தொடரில் களமிறங்க உள்ளார்.
32 வயதான சானியா மிர்சா குழந்தை பிறப்புக்கு பிறகு கடந்த மாதம் முதல் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வருகிறார். 2 வருடங்களுக்கு பிறகு களத்துக்கு திரும்பிய முதல் தொடரிலேயே (ஹோபர்ட் இன்டர்நேஷனல்) கோப்பையை வென்று அசத்தினார்.
தொடர்ந்து கடந்த மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனில் சானியா மிர்சா கலந்து கொண்டு விளையாடிய போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரின் தொடக்கத்திலேயே விலகினார்.
இந்நிலையில் காயத்தில் இருந்து குணமடைந்துள்ள சானியா நாளை (19-ம் தேதி) தொடங்கும் துபாய் ஓபன் டென்னிஸ் தொடரில் களமிறங்க உள்ளார்.
இரட்டையர் பிரிவில்சானியா, பிரான்சின் கரோலின் கார்சியாவுடன் இணைந்து விளையாட உள்ளார். இந்த ஜோடி முதல் சுற்றில் ரஷ்யாவின் அலாகுத்ரியவ்த்சேவா, சுலோவேனியாவின் கேத்ரினா ஸ்ரேபோட்னிக் ஜோடியை எதிர்த்து விளையாடுகிறது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT