Published : 17 Feb 2020 07:50 AM
Last Updated : 17 Feb 2020 07:50 AM

பிளஸ் 2-ல் வேதியியல் படிக்காதவர்களும் பொறியியல் சேரலாம்

சென்னை

பிளஸ் 2-ல் வேதியியல் பாடத்தை படிக்காதவர்களையும் பொறியியல் படிப்பில் சேர்க்க அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) பரிசீலித்து வருகிறது.

நம் நாட்டில் 3,200-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் பொறியியல் படிப்பில் மட்டும் 13 லட்சம் இடங்கள் உள்ளன.

வேலை வாய்ப்பு குறைவு உட்பட பல்வேறு காரணங்களால் பொறியியல் சேர்க்கை குறைந்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் தேசிய அளவில் சுமார் 50 சதவீத பொறியியல் இடங்கள் நிரம்பவில்லை. இதையடுத்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை ஏஐசிடிஇ மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான விதிகளை தளர்த்த திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ஏஐசிடிஇ உயர் அதிகாரிகள் கூறும்போது ‘‘தற்போது பிளஸ் 2-ல் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை படித்திருந்தால் மட்டுமே பிஇ, பிடெக் படிப்பில் சேர முடியும். இந்த விதியை தளர்த்தி வேதியியல் பாடத்தை விருப்பப் பாடமாக மாற்ற பரிசீலித்து வருகிறோம். வேதியியல் பாடத்தை கட்டாயம் படிக்க வேண்டியதில்லை. அதன்படி பொறியியல் படிப்பில் சேர கணிதம், இயற்பியல் பாடங்களுடன் உயிரியல், கணினி அறிவியல், வேதியியல் போன்ற பாடங்களில் ஏதேனும் ஒரு பாடத்தை விருப்பப் பாடமாக படித்திருந்தாலே சேரலாம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x