Published : 13 Feb 2020 11:30 AM
Last Updated : 13 Feb 2020 11:30 AM
மகாராஷ்டிரா மாநிலத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் 10-ம் வகுப்பு வரை மாணவர்கள் மராத்தி பயில்வது கட்டாயமாக்கப்படுகிறது.
இது தொடர்பாக மாநில மராத்தி மொழி அமைச்சர் சுபாஷ் தேசாய் கூறும்போது, "வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பள்ளியில் பத்தாம் வகுப்புவரை மராட்டி பயில்வதை கட்டாயமாக்குவது தொடர்பான சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.
இந்த சட்ட மசோதா நிச்சயம் நிறைவேற்றப்படும். ஆகையால் அதிலிருக்கும் நுணுக்கங்களில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது" என்றார்.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. வரும் 24-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநில அரசுப் பாடமுறை பள்ளிகள் தவிர சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐஜிஎஸ்சிஇ போன்ற பாடமுறை பள்ளிகளிலும் மராத்தி கட்டாயமாக்கப்படுவதே இதன் சிறப்பு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT