Published : 12 Feb 2020 10:11 AM
Last Updated : 12 Feb 2020 10:11 AM

உயர்கல்வி பயிலும் மாணவிகள் அதிகரிப்பு: முதல்வர் மம்தா பானர்ஜி பெருமிதம்

விஞ்ஞானம், அறிவியல், தொழில்நுட்பத்தில் பெண்களின் பங்கை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் பிப்.11-ம் தேதி சர்வதேச விஞ்ஞானத் துறை பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

இதுதொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பதிவில், “பெண்கள் உயர்கல்வியை கற்க ஊக்குவிக்கும் விதமாக எனது தலைமையிலான அரசு கன்யாஸ்ரீ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இதன்மூலம், கடந்த 10 ஆண்டுகளில் மேற்கு வங்கத்தில் உயர்கல்வி பயிலும் மாணவிகளின் விகிதம் உயர்ந்துள்ளது. 2010-11-ம் ஆண்டுகளில் 42 சதவீதம் பெண்கள் உயர்கல்வி படித்தனர்.

ஆனால், தற்போது, உயர்கல்வி பயிலும் மாணவிகளில் எண்ணிக்கை 47.3 சதவீதமாக உயர்ந்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

ஐஎப்எம்ஆர் நிறுவனத்துக்கு ஜேட்லியின் பெயர் வைத்தது மத்திய அரசு

புதுடெல்லி

தேசிய நிதி மேலாண்மை நிறுவனம் (ஐஎப்எம்ஆர்), நிதி அமைச்சகத்தின் செலவினத் துறையின் கீழ் செயல்படுகிறது. மும்பையில் அமைந்துள்ள இந்நிறுவனம் 1993-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மத்திய அரசு அதிகாரிகளுக்கு இதில் பயிற்சி அளிக்கப்படும்.

இந்நிலையில், ஐஎப்எம்ஆர்-க்கும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியின் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் இனி அருண் ஜேட்லி தேசிய நிதி மேலாண்மை நிறுவனம் என்று அழைக்கப்படும்.

அருண் ஜேட்லி 2014 ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை மத்திய நிதியமைச்சராக இருந்தார். கடந்த ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x