Published : 07 Feb 2020 10:57 AM
Last Updated : 07 Feb 2020 10:57 AM
ஜப்பானின் யோகோஹாமா நகரில் இருந்து சுமார் 3,700 பேருடன் டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பல் ஜனவரி 20-ம் தேதி கிளம்பி, சீனாவின் ஹாங்காங்குக்கு வந்தது.
பின்னர் ஹாங்காங்கில் இருந்து ஜப்பானுக்கு திரும்பும்போது, கப்பலில் இருந்து இறங்கிய முதியவர் ஒருவருக்கு கரோனா வைரஸ் இருப்பது தெரியவந்தது.
இதனால்,ஜப்பானுக்கு வந்த கப்பலுக்கு பிப்.1-ம்தேதி அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கிடையே, கப்பலில் உள்ள 20 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதனால், சுமார் 3,000 பயணிகளுடன் ஒகினாவா மாகாணம் அருகே கப்பல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT