Published : 06 Feb 2020 08:23 AM
Last Updated : 06 Feb 2020 08:23 AM
விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் பண்டைய மகளிர் அணிகலன் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. "கீழடி முதல் கி.பி. வரை" என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கண்காட்சியை வே.வ.வன்னியப் பெருமாள் மகளிர் கல்லூரி தமிழ் துறைத் தலைவர் நாகஜோதி தொடங்கி வைத்தார்.
கீழடி தொல் பொருள் துறையினரால் ஆய்வு செய்யப்பட்டு வெளிக்கொணரப்பட்ட சங்க கால மக்கள்பயன்படுத்திய அணிகலன் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. மேலும் சங்க காலப் பெண்கள் உச்சிமுதல் பாதம் வரை அணிந்திருந்த நெத்திச்சூடி, கம்மல், மெட்டி, சங்கிலி,வளையல், கொலுசு, ஒட்டியாணம் ஆகியவையும், அணிகலன்கள் அணிவதால் ஏற்படும் பயன்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இக்கண்காட்சியை விருதுநகரில் உள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளி, சத்திரிய பெண்கள் மேல்நிலைப் பள்ளி உட்பட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். அவர்களுக்கு பழங்காலப் பொருட்கள் குறித்து ராஜராஜன் விளக்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள் செய்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT