Published : 01 Feb 2020 10:35 AM
Last Updated : 01 Feb 2020 10:35 AM

டான்செட் நுழைவுத் தேர்வு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

டான்செட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் பிப்ரவரி 4-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்இ, எம்டெக், எம்பிஏ போன்ற முதுநிலை படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட்) தேர்ச்சி பெற வேண்டும்.

அதன்படி, 2020-ம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு எம்சிஏ,எம்பிஏ படிப்புகளுக்கு பிப்ரவரி 29-ம் தேதியும், எம்இ, எம்ஆர்க்மற்றும் எம்.பிளான் படிப்புகளுக்கு மார்ச் 1-ம் தேதியும் நடைபெற உள்ளன.

இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜனவரி 7-ல்தொடங்கி நேற்றுடன் முடிவடைதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பட்டதாரிகளின் கோரிக்கையை ஏற்று டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் பிப்.4-ம் தேதி வரைநீட்டிக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் www.annauniv.edu என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக் கலாம்.

தேர்வுக் கட்டணம் ரூ.600-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவர்கள் கட்டணமாக ரூ.300 செலுத்தினால் போதுமானது. தற்போது கல்லூரிகளில் இறுதிஆண்டு படிக்கும் மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதர விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x