Published : 23 Jan 2020 11:59 AM
Last Updated : 23 Jan 2020 11:59 AM

வெளிமாநிலத்தில் படிக்கும் 90 லட்சம் மாணவர்களுக்கு போதிய வசதிகள் இல்லை: புதிய ஆய்வில் தகவல்

மாணவர்களுக்கான வசதிகளை வழங்கும் அமைப்பு (எஸ்ஏபிஎப்ஐ) மற்றும் குஷ்மேன் & வேக்ஃபீல்ட் ஆகியவை இணைந்து இந்திய அளவில் வெளி மாநிலங்களில் தங்கி படிக்கும் மாணவர்கள் பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டன.

இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதில் கூறியிருப்பதாவது:

இந்திய முழுவதும் 3.7 கோடி மாணவர்கள் உயர்கல்வி படித்து வருகிறார்கள். அதில் 24 சதவீதம், அதாவது சுமார் 90 லட்சம் மாணவர்கள் வெளி மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்து படித்து வருகிறார்கள். இதன்காரணமாக தொழில் ரீதியாக நிர்வகிக்கப்படும் மாணவர் விடுதிகளுக்கு பெங்களூரு, டெல்லி-என்.சி.ஆர் (தலைநகர் பகுதி) புனே ஆகிய நகரங்கள் பெரிய சந்தையாக உள்ளன.

2018-19-ம் ஆண்டு நிலவரப்படி, டெல்லியில் உயர்கல்வி படிக்கும் 7.45 லட்சம் மாணவர்களில் 50 சதவீதம் பேர் வெளி மாணவர்கள்தான். இதன் காரணமாக டெல்லியில் கூடுதலாக 2.5 லட்சம் படுக்கை வசதி கொண்ட விடுதிகள் தேவைபடுகிறது. பெங்களூரூ நகரத்தில் சுமார் 5.38 லட்சம் மாணவர்கள் உயர்கல்வி படித்து வருகிறார்கள். அதில் 60 சதவீதம் வெளி மாணவர்கள் படிக்கிறார்கள். அங்கு சுமார் 92 ஆயிரம் படுக்கை வசதி தேவைப்படுகிறது.

அதேபோல், புனே நகரத்தில் 4 லட்சம் மாணவர்களில் 60 சதவீதம் பேர் வெளிமாணவர்கள்தான். இங்கு இடவசதி குறைவாக உள்ளதால், இன்னும் 1.33 லட்சம் படுக்கை வசதிகள் மாணவர்களுக்காக தேவைப்படுகிறது. உயர்கல்விக்காக புலம் பெயர்ந்த மாணவர்கள், தங்களுக்கான உணவு, பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை
எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால், அவர் களுக்கு அது கிடைக்கவில்லை. இதன்காரனமாக, இந்த துறையில் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக வெளிநாட்டு நேரடி முதலீடு செய்ய அதிக வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x