Published : 13 Jan 2020 12:03 PM
Last Updated : 13 Jan 2020 12:03 PM
உத்தர பிரதேச தலைநகா் லக்னோவில், வரும் பிப்ரவரி மாதம் 5-8-ம் தேதி வரை ‘11-ஆவது பாதுகாப்பு கண்காட்சி’ நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு செய்து வருகிறது.
இந்நிலையில், கண்காட்சிக் காக கோமதி ஆற்றங்கரையில் 64 ஆயிரம் மரங்களை மாநில அரசு வெட்ட உள்ளதை தடுக்கக்கோரி சமூக ஆா்வலா் ஷீலா பார்சே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “பாதுகாப்பு கண்காட்சி நடத்த சுமார் 64 ஆயிரம் மரங்களை வெட்ட மாநில அரசு முடிவு செய்துள்ளது.
மரங்களை வெட்டி, இயற்கைக்கு அழிவு ஏற்படுத்துவது அடுத்த தலைமுறையினருக்கு நாம் செய்யும் துரோகம். இது மனித சமூகத்துக்கு மட்டுமல்லாமல் பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட பிற உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, மரங்களையும் உயிராக அங்கீகரித்து அவற்றை வெட்டவிடமால் தடுக்கவேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தொடா்பாக பதிலளிக்கு மாறு உ.பி அரசுக்கு உச்ச நீதிமன்றம் டிசம்பர் மாதம் 18-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மனு மீதான விசாரணை, உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே உள்ளிட்ட 3 நீதிபதிகள் அமா்வு முன் வியாழக்கிழமை மீண்டும் வந்தது.
அப்போது, மாநில அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரவீந்தா் ராய்ஜடா, ‘‘பாதுகாப்பு கண்காட்சிகாக லக்னோவில் இதுவரை ஒரு மரம் கூட வெட்டப்படவில்லை. மரங்களை வெட்டு வதற்கு எந்தவிதத் திட்டமும் இல்லை. அப்பகுதியில் எந்த மரமும் வெட்டப்படாது” என்று உறுதி யளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT