Published : 09 Jan 2020 08:44 AM
Last Updated : 09 Jan 2020 08:44 AM

பள்ளி மாணவர்களுக்கு கூடைப்பந்து போட்டி

கோவையில் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி தொடங்கியது. கோயம்புத்தூர் ஓரியன் அரிமாசங்கம் சார்பில் கோவை மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டி, நேரு விளையாட்டு அரங்கம் எதிரில் உள்ள மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 50 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. சப்-ஜூனியர் மாணவர் பிரிவு, மாணவிகள் பிரிவு, ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் போட்டி நடைபெற்று வருகிறது.

அதில் வெற்றி பெற்ற அணிகள் விவரம்: எஸ்வி ஜிவி பள்ளி அணி

ஒய்எம்சிஏ அணி, ஸ்டார் அணியை 59-22 என்ற புள்ளி கணக்கில் வென்றது. எஸ்விஜிவி பள்ளி அணி, பெர்க்ஸ் பள்ளி அணியை 48-10 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது.

சுகுணா பிப்ஸ் பள்ளி அணி, பாரதி மெட்ரிக் பள்ளி அணியை 30-10 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்தது. யங் பிளட்ஸ் அணி, நேஷனல் மாடல் பள்ளி அணியை 50-11 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

பாரதி மெட்ரிக் பள்ளி அணி, சதர்ன் வாரியர்ஸ் அணியை 82-79 என்ற புள்ளி கணக்கில் வென்றது. ஆர்.எல். எம்.எச்.எஸ். அணி, பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லூரி அணியை 68-55 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது. போட்டிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x