Published : 04 Jan 2020 04:15 PM
Last Updated : 04 Jan 2020 04:15 PM
மாவட்ட நீதிபதி பதவிகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற, மனித நேய அறக்கட்டளை பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளது.
சைதை துரைசாமியின் மனிதநேயம் ஐஏஎஸ் கல்வியகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவதுs:
மாவட்ட நீதிபதி பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு மார்ச் மாதம் நடக்கிறது. இதற்கான பயிற்சி வகுப்புகளை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் மற்றும் நீதிகரங் கள் மூத்த வழக்கறிஞர் குழுமம் ஆகியவற்றுடன் இணைந்து மனிதநேய அறக்கட்டளை நடத்திவருகிறது. இப்பயிற்சி வகுப்பு ஜன.8 முதல் சென்னை உயர்நீதிமன்ற பார் கவுன்சில் கலையரங்கத்தில் நடைபெறும்.
இதில் பங்கேற்க விரும்புவோர் இன்று (ஜன.4) முதல் ஜன.7 வரை‘28, முதல் பிரதான சாலை, சிஐடி நகர், சென்னை - 35’ என்ற முகவரியில் உள்ள மனிதநேய ஐஏஎஸ் கல்வியகத்தில் நேரிலோ, 044-2435 8373, 24330952, 8428431107 ஆகிய எண்கள் மூலமாகவோ பதிவு செய்யலாம்.
பார் கவுன்சில் அலுவலகத்துக்கு நேரிலோ, 044-25342739 எண்ணிலோ பதிவு செய்யலாம். மேலும், பி.அசோக், வழக்கறிஞர், மதுரை உயர் நீதிமன்ற வளாக அறை எண்.88-ல் நேரிலோ 8870968707 எண்ணிலோ பதிவு செய்யலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT