Published : 12 Dec 2019 12:32 PM
Last Updated : 12 Dec 2019 12:32 PM

நாடு முழுவதும் ஒரே கல்வி முறை: உ.பி. முதல்வர் யோகி கோரிக்கை

சமூக நீதியை நிலைநாட்ட நாடு முழுவதும் ஒரே கல்வி முறையை அமல்படுத்த வேண்டும் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரிக்கை விடுத்துள்ளார்.

உத்தரப் பிரதேச பள்ளி உச்சி மாநாடு, லக்னோவில் நேற்று நடைபெற்றது. அதில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டார். விழாவில் அவர் பேசும்போது, ''நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள், கல்வி வாரியங்கள், கல்வி நிறுவனங்களின் கல்வி முறை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி அனைவரும் சமம் எனும்போது கல்வி முறையிலும் சமத்துவம் பேணப்பட வேண்டும். துறைகளில் சமத்துவம் நிலவாததால், மக்களிடையே சமத்துவ உணர்வு எழுவதில்லை.

கல்வி முறை கட்டுண்டு கிடந்தால், சமூகமும் தேசமும் வளர முடியாது. கல்வி முறை, அனைத்துத் தரப்பின் வளர்ச்சியையும் உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். சுய நம்பிக்கையை அளிக்க வேண்டும். புதுமையான மாற்றங்களையும் கல்வி உருவாக்க வேண்டும்.

வெவ்வேறு காலகட்டங்களில் ஏராளமான நாடுகள், தனித்த கல்வி முறையைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றன. நாமும் கல்வித் துறையில் தனித்த உத்திகளைப் பயன்படுத்த வேண்டும்.

மாநிலம் முழுவதும் கல்வி முறையை மேம்படுத்த பொதுமக்களின் பங்களிப்பு அவசியம். இது நாடு முழுமைக்கும் விரிவுபடுத்தவேண்டும்'' என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x