Published : 06 Dec 2019 02:23 PM
Last Updated : 06 Dec 2019 02:23 PM
காலை உணவைத் தவிர்க்கும் குழந்தைகள், தங்களின் படிப்பில் குறைந்த மதிப்பெண்களையே பெறுவர் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் நலனுக்கான ஃப்ரண்டியர்ஸ் ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
''லண்டனின் மேற்கு யோர்க்ஷியரில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 294 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் 29 சதவீதம் மாணவர்கள் காலை உணவை எடுத்துக் கொள்ளாமலோ அல்லது அரிதாகச் சாப்பிடுபவர்களாகவோ இருந்தனர். 18% மாணவர்கள் எப்போதாவதும், 53% பேர் தொடர்ச்சியாகவும் காலை உணவை உட்கொண்டனர்.
இதில் மாணவர்களின் காலை உணவுக்கும் அவர்களின் செயல்திறனுக்கும் நேரடித் தொடர்பு இருந்தது இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து காலை உணவை உட்கொள்ளாத மாணவர்கள், சரியாகச் சாப்பிடும் மாணவர்களைவிட குறைந்த மதிப்பெண்களையே பெற்றிருந்தனர்.
காலை உணவு கிடைக்காத மாணவர்களின் மூளை, பாதிப்புக்கு ஆளாகிறது. குழந்தைகளின் குறைவான ஊட்டச்சத்து, பள்ளியில் பெறும் குறைவான மதிப்பெண்களுடன் தொடர்புடையதாக உள்ளது. காலை உணவு கிடைக்காத அல்லது தவிர்க்கும் மாணவர்கள், தொடர்ச்சியாக சரிவிகித உணவை எடுத்துக்கொள்ளும் மாணவர்களை விட இரண்டு கிரேடுகள் குறைவான மதிப்பெண்ணையே பெறுகிறார்கள்.
தங்கள் குழந்தைகள் குறைந்த மதிப்பெண்களையே பெறுகிறது என்று கவலைப்படும் பெற்றோர்கள், அவர்களின் காலை உணவையும் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்''.
இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT