Published : 05 Dec 2019 08:15 AM
Last Updated : 05 Dec 2019 08:15 AM
தலைநகர் டெல்லியில் அரசு விநியோகம் செய்யும் குடிநீர், மக்கள்குடிப்பதற்கு ஏற்றது இல்லை என்று இந்திய தர நிர்ணய ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டது.
இந்த செய்தி நாடு முழு வதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் டெல்லி மாநில நீர்வளத்துறை நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டது.
அதில், “நீர்வளத் துறை சார்பாக கடந்த 10 நாட்களில் மாநிலம்முழுவதும் உள்ள நீர் ஆதாரங்களில் 4,204 நீர் மாதிரிகளை எடுத்து,அதை சோதனைக்கு உட்படுத்தினோம்.
அதில், 4,128 நீர் மாதிரிகள் குடிக்க ஏற்றதாக முடிவு கிடைத்துள்ளது. எனவே, தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதுபோன்ற குழப்பங்களை ஏற்படுத்தவேண்டாம்” என்று குறிப்பிட் டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT