Published : 03 Dec 2019 08:15 AM
Last Updated : 03 Dec 2019 08:15 AM

‘பாஸ்டேக்’ இல்லாத வாகனங்களுக்கு இரட்டிப்பு கட்டணம்

புதுடெல்லி

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளை கடக்கும் வாகனங் கள், கட்டணம் செலுத்த அதிகமான நேரம் ஆகுவதால், கடுமையான வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தவும் சுங்கவரியை சரியாக வசூல் செய்யவும் பாஸ்டேக் என்னும் மின்னணு பணபரிமாற்றத்தை மத்திய போக்குவரத்து அமைச்சகம் அறிமுகம் செய்தது.

பாஸ்டேக் வரும் 15-ம் தேதி அமலுக்கு வரவுள்ளது. பாஸ்டாக் சேவையை பெற்ற வாகனம் வரும்போது, தானியங்கியாக சுங்கச்சாவடி செயல்படும். டிசம்பர் 15-ம் தேதிக்குப் பிறகு பாஸ்டேக் இல்லாமல் சுங்கச்சாவடிகளைக் கடக்கும் வாகனங்களுக்கு இரட்டிப்புக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x