Published : 02 Dec 2019 09:21 AM
Last Updated : 02 Dec 2019 09:21 AM
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, காந்தியின் பேச்சுகள், புத்தகங்கள் மற்றும் கடிதங்கள் போன்றவற்றை கொண்டு, காந்திபீடியா என்ற போர்டல் உருவாக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளை மத்திய மாநில அரசுகள் நடத்தி வருகின்றன. இதற்கிடையில், மத்திய கலாச்சாரத் துறை சார்பாக மகாத்மா காந்தி-150 என்ற இணைய தளம் உருவாக்கப்பட்டது.
இந்நிலையில், 2 இந்திய தொழில் நுட்ப நிறுவனங்கள்(ஐஐடி காந்திநகர், ஐஐடி கரக்பூர்) மற்றும் தேசிய அறிவியல் அருங்காட்சியகங்களின் கவுன்சில் இணைந்து ‘காந்திபீடியா’ என்ற போர்டலை உருவாக்கி உள்ளனர். இந்த போர்டலானது www.gandhi.gov.inஎன்ற அரசு இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக காந்திபீடியாவில், மகாத்மா காந்தி எழுதிய 40 புத்தகங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், காந்தியடிகள் சுதந்திரத்துக்காக செய்த பணிகளை ஆண்டு வாரியாக குறிப்பிடும் புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து கலாச்சாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், “வலைத்தளங்களுக்கு காந்தியை கொண்டு செல்வ
தன் மூலம், சமூகத்தை மறுசீரமைக்க பயன்படும். காந்தியின் புத்தகம், கடிதம் ஆகியவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள லாம்” என்று கூறப்பட்டுள்ளது.
காந்தியின் புத்தகங்கள், கடிதங்கள் போன்றவை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே இணையதளத்தில் உள்ளது. எனவே, இந்தி தெரியாத பிற மாநில மக்களும் மாணவர்களும் பயன்பெறும் வகையில், காந்தியின் மொழியாக்கம் செய்யப்பட்ட புத்தகங்களையும் காந்திபீடியாவில் பதிவேற்றம் செய்யவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT