Published : 01 Dec 2019 07:33 PM
Last Updated : 01 Dec 2019 07:33 PM

தொடரும் மழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

சென்னை

தொடரும் கனமழை காரணமாக தமிழகம், புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளின் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பள்ளி, கல்லூரிகள் விடுமுறை

* சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) விடுமுறை.

* தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) விடுமுறை.

* திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) விடுமுறை.

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

* ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (திங்கட்கிழமை) விடுமுறை.

* புதுச்சேரியில் அரசு, தனியார் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (திங்கட்கிழமை) விடுமுறை.

* கடலூர் மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (திங்கட்கிழமை) விடுமுறை.

* காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (திங்கட்கிழமை) விடுமுறை.

* செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (திங்கட்கிழமை) விடுமுறை.

பின்னணி:

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 16-ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. கடந்த சில நாட்களாக கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், டெல்டா மாவட்டங்கள், மதுரை மற்றும் புறநகர் பகுதிகளிலும் நேற்று விடிய, விடிய மழை பெய்தது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்துக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ விடப்பட்டது.

மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணிநேரத்துக்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கனமழை தொடர்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் இந்த விடுமுறையை அறிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x