Published : 28 Nov 2019 08:29 AM
Last Updated : 28 Nov 2019 08:29 AM
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கான தேர்வு முறையில் 2023-ம் ஆண்டில் பெரிய மாற்றம் செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி கூறியதாவது:
மாணவர்களிடையே ஆக்கபூர்வ மான, விமர்சன மற்றும் பகுப்பாய்வு சிந்தனையை உயர்த்துவதற்காக, 2023 க்குள் 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான தேர்வு முறையில் பெரிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படும். நாட்டின் எதிர்காலத்தை மனதில் வைத்துதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது காலத்தின் தேவை. தற்போது, சிபிஎஸ்இயில் உள்ள 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இருக்கும் தேர்வு முறையானது, 20 சதவீத பாடத்துக்கு வெளியிலும், 10 சதவீத கேள்விகள் ஆக்கபூர்வமான சிந்தனையை அடிப்படையாகக் கொண்டது.
2023-ம் ஆண்டில் 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான கேள்வித்தாள்களில், புதுமையான மற்றும் விமர்சன சிந்தனையின் அடிப்படையில் இருக்கும். அதே போல், பள்ளிகளின் உள்கட்டமைப்பு, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பள்ளி கல்வி முறையில் சரியான இணைப்புகள் மற்றும் பிணைப்பை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
மாணவர்களுக்கு 3 முதல் 6 மாதங்கள் வரை வழிகாட்டிகளாகவும், தகவல் தொடர்பாளராகவும், வெளிப்படையாகவும், விமர்சன சிந்தனையையும் உணர்ச்சி சமநிலையையும் ஆசிரியர்கள் கொண்டிருக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையானது தொழில் மற்றும் முக்கிய பாடங்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆரம்பகால குழந்தை பருவ பராமரிப்பு, ஆசிரியர் பயிற்சி, தொழிற்கல்வியை ஊக்குவித்தல் போன்ற அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT