Published : 26 Nov 2019 08:46 AM
Last Updated : 26 Nov 2019 08:46 AM

செய்திகள் சில வரிகளில்: ஆந்திராவில் லஞ்ச அதிகாரிகள் மீது புகார் அளிக்க மையம்

புதுடெல்லி

கவிஞர்கள், கதை சொல்லிகளை ஒன்றிணைக்கும் பேச்சு திருவிழாவின் முதல் பகுதி டெல்லியில் டிசம்பர்20-ம் தேதி தொடங்குகிறது.
‘கம்யூ அமைப்பு’ சார்பாக 2 நாட்கள் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில், உலகம் முழுவதும் உள்ள கதைசொல்லிகள், கவிஞர்கள், கலைஞர்கள் பங்கேற்கஉள்ளனர். “கதைசொல்லும் முறையை பற்றியும், பல்வேறு வகையான மொழியியல் குழுக்கள், கலாச்சாரங்களை ஊக்குவிப்பதையும் நோக்கமாக கொண்ட விழாவாக இது அமையும்” என நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ரோஷன் அப்பாஸ் கூறினார்.

ஆந்திராவில் லஞ்ச அதிகாரிகள் மீது புகார் அளிக்க மையம்

அமராவதி

அரசு துறையில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது புகார் அளிக்க உதவி மையத்தை ஆந்திர முதல்வர் அமைத்துள்ளார்.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது புகார் அளிக்கும் உதவி மையத்தின் இலவச எண்ணை(14400) நேற்று தொடங்கி வைத்து கூறுகையில், “பொதுமக்கள் புகார் அளிக்கும் அரசு அதிகாரிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். ஊழல் லஞ்சத்தை ஒழிக்கவே இம்மையம் அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x