Published : 16 Nov 2019 10:02 AM
Last Updated : 16 Nov 2019 10:02 AM
பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு உரிய கல்வி உரிமைகள் அளிக்கப்படுவது தொடரும் என்று பள்ளிக் கல்வித்துறை ஆலோசகர் பங்காஷ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) சிறப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பள்ளி தொடங்கப்பட்டது. குருநானக் தேவின் 550-வது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.
இதில் கைபர் பக்துன்கவா மாகாண முதல்வரின் அறிவியல் தொழில்நுட்ப சிறப்பு உதவியாளர் காம்ரான் பங்காஷ் மற்றும் பள்ளிக் கல்வித்துறை ஆலோசகர் ஜியா உல்லா பங்காஷ் ஆகிய இருவரும் கலந்துகொண்டனர். அவர்களின் முன்னிலையில் பாபா குருநானக் அறிவியல், தொழில்நுட்ப, கலை மற்றும் கணிதப் பள்ளி திறந்து வைக்கப்பட்டது.
இதில் பேசிய பள்ளிக் கல்வித்துறை ஆலோசகர் ஜியா உல்லா பங்காஷ், ''கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள அனைத்து சிறுபான்மை மக்களும் மற்ற பெரும்பான்மையினரைப் போல அனைத்து உரிமைகளையும் அனுபவிக்கலாம். வரும் திங்கட்கிழமை முதல் (நவ. 18) பள்ளியில் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
பாக். அரசு சிறுபான்மையினருக்குக் கல்வி உரிமைகளை அளிப்பது மற்றும் இன்ன பிற அடிப்படை வசதிகளை வழங்குவதைத் தொடர்ந்து மேற்கொள்ளும்'' என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT