Published : 15 Nov 2019 10:53 AM
Last Updated : 15 Nov 2019 10:53 AM
ஹாங்காங்
ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் கால் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் முன்னேறியுள்ளார். ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டி ஹாங்காங் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடந்த 2-வது சுற்றுப் போட்டியில் இந்திய வீரரான கிடாம்பி காந்த், சகநாட்டு வீரரான சவுரப் வர்மாவை எதிர்கொண்டார். கடும் போட்டியைக் கொண்ட இந்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த், 21-11 15-21 21-19 என்ற செட்கணக்கில் போராடி வென்றார்.
இதன்மூலம் இப்போட்டியின் கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். கால் இறுதிப் போட்டியில் சீனாவைச் சேர்ந்த சென் லாங்குடன் அவர் மோதவுள்ளார்.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT