Published : 07 Nov 2019 10:53 AM
Last Updated : 07 Nov 2019 10:53 AM
சென்னை
‘பெரியார் 1000’ என்ற தலைப்பில் நடைபெறவுள்ள வினா-விடை போட்டியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாறை மாணவர்கள் அறிந்து கொள்ளவும், பள்ளி மாணவர்களிடம் அறிவியல் மற்றும் சமூகவியல் சிந்தனைகளை வளர்க்கும் வகையிலும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலை பல்கலைக்கழகம்) சார்பில் ‘பெரியார் 1000’ என்ற தலைப்பில் வினா - விடை போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இப்போட்டியில் அனைத்து வகை பள்ளிகளில் இருந்தும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். இதில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 3 பரிசுகள் தரப்படும். எனவே, அனைத்து பள்ளி மாணவர்களும் போட்டியில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இதுதொடர்பான வழிகாட்டுதல்களை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT