Published : 29 Oct 2019 03:03 PM
Last Updated : 29 Oct 2019 03:03 PM
சென்னை
சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்குகின்றன. இப்பள்ளிகளில் 62 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். சிபிஎஸ்இ பள்ளிகளில் 10, 12-ம்வகுப்புகளுக்கு பொதுத்தேர்வும், 9, 11-ம் வகுப்புகளுக்கு வருடாந்திரத் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகள் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (என்சிஇஆர்டி) பாடத்திட்ட அடிப்படையில் நடைபெறும் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதற்கு சிபிஎஸ்இ மறுப்பு தெரிவித்துள்ளது. 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் என்சிஇஆர்டி பாடங்களின் அடிப்படையில் நடைபெறாது என விளக்கம் அளித்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT