Published : 29 Oct 2019 03:03 PM
Last Updated : 29 Oct 2019 03:03 PM

என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு இல்லை

சென்னை

சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்குகின்றன. இப்பள்ளிகளில் 62 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். சிபிஎஸ்இ பள்ளிகளில் 10, 12-ம்வகுப்புகளுக்கு பொதுத்தேர்வும், 9, 11-ம் வகுப்புகளுக்கு வருடாந்திரத் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகள் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (என்சிஇஆர்டி) பாடத்திட்ட அடிப்படையில் நடைபெறும் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதற்கு சிபிஎஸ்இ மறுப்பு தெரிவித்துள்ளது. 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் என்சிஇஆர்டி பாடங்களின் அடிப்படையில் நடைபெறாது என விளக்கம் அளித்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x