Published : 24 Oct 2019 08:05 AM
Last Updated : 24 Oct 2019 08:05 AM
மாட்ரிட்:
ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்கள் பயன்படுத்தும் மாத்திரையை இரவு வேளையில் உட்கொண்டால் பாதிப்பு குறையும். ஆனால் காலை வேளையில் உட்கொள்பவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம், இருதய செயலிழப்பு போன்ற விளைவுகள் ஏற்படும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆறு ஆண்டுகளுக்கு மேலாக ரத்த அழுத்த பாதிப்புக்கு மாத்திரை உட்கொள்ளும் 19,084 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
இரவு வேளையில் மாத்திரை உட்கொள்பர்களுக்கு, இருதய பாதிப்பு அல்லது ரத்த நாளக் கோளாறு 66%, மாரடைப்பு 44% இருதய செயலிழப்பு 42%, பக்கவாதம் 50% குறைந்துள்ளது என தெரிய வந்துள்ளது.-பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT