Published : 23 Oct 2019 09:14 AM
Last Updated : 23 Oct 2019 09:14 AM

கோவையில் மாவட்ட அளவிலான பள்ளி தடகளப் போட்டி

கோவை

கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான தடகளப் போட்டியில் வெற்றிபெற்ற சாம்பியன் களுக்கு காவல்துறை துணை ஆணையர் செல்வகுமார் பரிசு வழங்கினார்.

கோவை மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டி, நேரு விளையாட்டுஅரங்கில் நடைபெற்றது. இப்போட்டையை கோவை மாவட்ட பள்ளிக்கல்வித் துறை சார்பில் சிஎஸ்ஐ ஆண்கள் பள்ளி நடத்தியது. இதில், கோவை மற்றும் பொள்ளாச்சியில் உள்ள 11 குறுமையங்களில் உள்ளபள்ளிகளைச் சேர்ந்த 14, 17, 19 வயதுக்குஉட்பட்ட 1,295 மாணவர்கள் பங்கேற்றனர்.

போட்டியில் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றவர்கள் விவரம்:மாணவர்களுக்கான 14 வயதுக்கு உட்பட்டோருக்கானோர் பிரிவில் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்பிரில் நியாஷ், 17 வயதுக்கு உட்பட்டோருக்கானோர் பிரிவில் ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவர் சஞ்சய், 19 வயதுக்குஉட்பட்டோருக்கானோர் பிரிவில் ரத்தினபுரிமாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர் வெங்கடேஷ் ஆகியோர் தனிநபர் சாம்பியன்பட்டம் வென்றார். இப்பிரிவில் கோவை கல்வி மாவட்ட ‘ஆ' குறுமையம் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றது.

மாணவிகளுக்கான 14 வயதுக்கு உட்பட்டோருக்கானோர் பிரிவில் அவிநாசிலிங்கம் மேல்நிலைப் பள்ளி மாணவி ரோஜா, 17வயதுக்கு உட்பட்டோருக்கானோர் பிரிவில்சவறா வித்யாலயா பள்ளி மாணவி திவ்ய, 19 வயதுக்கு உட்பட்டோருக்கானோர் பிரிவில் கேஜி பள்ளி மாணவி சௌமியா ஆகியோர் தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றனர். இப்பிரிவில் கோவை கல்விமாவட்டம் ‘அ' குறுமையம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம்பெற்றது. போட்டிகளைத் தொடர்ந்து நடைபெற்றபரிசளிப்பு விழாவில், கோவைமாநகர தலைமையிடத்து துணை காவல் ஆணையர் செல்வகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள்வழங்கினார். விழாவில் சிஎஸ்ஐ ஆண்கள்பள்ளியின் தாளாளர் மோசஸ், உறுப்பினர் சுதன் அப்பாதுரை, உடற்கல்வி இயக்குநர் மணவாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x