Published : 17 Oct 2019 08:18 AM
Last Updated : 17 Oct 2019 08:18 AM

மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை

சென்னை மத்திய அரசின் உயர்கல்வி உதவித்தொகைக்கு அக்டோபர் 31-ம் தேதிக்குள் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநர் ஜோதி வெங்கடேஸ்வரன் வெளியிட்ட அறிவிப்பு:

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் வழங்கப்படும் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்துக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்கள் www.scholarships.gov.in என்ற மத்திய அரசின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x