Published : 17 Oct 2019 08:18 AM
Last Updated : 17 Oct 2019 08:18 AM
சென்னை
சென்னை மத்திய அரசின் உயர்கல்வி உதவித்தொகைக்கு அக்டோபர் 31-ம் தேதிக்குள் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநர் ஜோதி வெங்கடேஸ்வரன் வெளியிட்ட அறிவிப்பு:
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் வழங்கப்படும் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்துக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்கள் www.scholarships.gov.in என்ற மத்திய அரசின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT