Published : 14 Oct 2019 10:09 AM
Last Updated : 14 Oct 2019 10:09 AM

ஜப்பான் நாட்டை புரட்டிப் போட்ட ‘ஹகிபிஸ்’ புயல்

டோக்கியோ

ஜப்பானில் ‘ஹகிபிஸ்’ புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. ‘ஹகிபிஸ்’ புயலானது ஜப்பானின் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 7மணிக்கு, 216 கிலோ மீட்டர் வேகத்தில், தென்மேற்கு பகுதியில் இருக்கும் ஹவுசு திபகற்பத்தில் கரையை கடந்தது.

முன்னதாக, புயல் காரணமாக வெள்ளம், நிலச்சரிவு ஏற்படலாம் என்று ஜப்பான் வானிலை நிலையம் எச்சரித்திருந்தது. இந்நிலையில், ‘ஹகிபிஸ்’ புயல் காரணமாக பெய்த கனமழையால், சிக்குமா நதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதன்காரணமாக, குடியிருப்பு பகுதியில் 2-வது தளம் வரை வெள்ளம் தேங்கியது. வெள்ளத்தில் சிக்கியவர்களை ஜப்பான் ராணுவ வீரர்கள், ஹெலிகாப்டர் மூலம் மீட்டு வருகின்றனர்.

வெள்ளத்தில் சிக்கி இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர். 99 பேருக்கு பலத்த காயமும், 12 பேரை காணவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஏராளமான விவசாய மற்றும்
பண்ணை நிலங்கள் சேதமடைந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x