Published : 14 Nov 2023 07:00 AM
Last Updated : 14 Nov 2023 07:00 AM

கோவாவுக்கு சுற்றுலா ரயில்: ஐஆர்சிடிசி ஏற்பாடு

சென்னை: கொச்சுவேலியில் இருந்து சென்னை எழும்பூர் வழியாக கோவா மட்கோனுக்கு சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஐஆர்சிடிசி செய்துள்ளது. பாரத் கவுரவ் திட்டத்தின்கீழ், ஐஆர்சிடிசி சார்பில், கொச்சுவேலி - மட்கோன் இடையே சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது. உடுப்பி, மூகாம்பிகை கோயில், முருதேஸ்வர் கோயில்,சிருங்கேரி (சாரதா கோயில்),ஹொரநாடு (அன்னபூர்னேஸ்வரி கோயில்) உள்ளிட்ட யாத்திரை இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

இந்த சிறப்பு ரயில் கொச்சுவேலியில் இருந்து டிச.7-ம் தேதிஅதிகாலை 12.30 மணிக்கு புறப்பட்டு, தென்காசி, மதுரை, திருச்சி,சென்னை எழும்பூர் வழியாக மட்கோனுக்கு டிச.8-ம் தேதி இரவு 7.30 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கமாக, மட்கோனில் இருந்து டிச.10-ம் தேதி சிறப்பு ரயில் புறப்பட்டு, சென்னை எழும்பூர் வழியாக கொச்சுவேலிக்கு டிச.12-ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு சென்றடைகிறது. இது தொடர்பாக கூடுதல் விவரம் மற்றும் முன்பதிவுக்கு 9003140680, 9003140682 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x