Published : 16 Feb 2021 03:12 AM
Last Updated : 16 Feb 2021 03:12 AM
சென்னை கொளத்தூர் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் நிவாரண உதவிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கும்போதும் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோதும் முதல்வர் குறித்துகருத்து தெரிவித்திருந்தார். ஸ்டாலினின் கருத்து முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி முதல்வர் பழனிசாமி தரப்பில் தொடரப்பட்ட வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே.சுதா, மு.க.ஸ்டாலின் வரும் 25-ம் தேதி நேரில் ஆஜராகும்படி சம்மன் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT