Published : 04 Aug 2021 03:23 AM
Last Updated : 04 Aug 2021 03:23 AM
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இளையரசனேந்தல் பிர்காவை இணைக்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட 45 பேர் கைது செய்யப்பட்டனர்.
இளையரசனேந்தல் பிர்காவுக்கு உட்பட்ட இளையரசனேந்தல், பிள்ளையார்நத்தம்,ஜமீன் தேவர்குளம், வெங்கடாசலபுரம், அய்யநேரி, அப்பநேரி, சித்திரம்பட்டி, புளியங்குளம்,நக்கலமுத்தன்பட்டி, முக்கூட்டுமலை, பிச்சைதலைவன்பட்டி, வடக்குபட்டி ஆகிய 12 ஊராட்சிகளை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும். அல்லது, இளையரசனேந்தலை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, தேசிய விவசாயிகள் சங்கம், இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்புக்குழு சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.
கோவில்பட்டியில் இருந்து ராஜபாளையம் செல்லும் சாலையில் இளையரசனேந்தல் விலக்கில் நடந்த மறியல் போராட்டத்துக்கு தேசிய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.ரெங்கநாயகலு தலைமை வகித்தார். இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு குழுத் தலைவர் முருகன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். மறியல் செய்த 45 பேரை போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT