Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

அஞ்சலகங்களில் ஆதார் சேவைக்கு தடை :

சென்னை: அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், கரோனா காரணமாக கடந்த வாரம் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அதன்படி, நோய்த் தொற்றின் தீவிரத்தைப் பொறுத்து, சிறப்பு முகாம்கள், மேளாக்களை பொது இடங்களில் நடத்துவது தொடர்பாக அந்தந்த அஞ்சலக அதிகாரிகள் முடிவு செய்துகொள்ளலாம். ஆதார் பதிவு, திருத்தம் போன்றவற்றுக்காக பயோமெட்ரிக் பயன்படுத்தப்படும் என்பதால், அதை அடிக்கடி கிருமிநாசினி மூலமாக சுத்தும் செய்து, மீண்டும் பயன்படுத்தலாம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதற்கிடையில், கரோனா தொற்று மேலும் தீவிரமாகப் பரவி வருவதால், அஞ்சல் துறை புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, தமிழக அஞ்சல் வட்டத்தின்கீழ் உள்ள அஞ்சல் நிலையங்களில், ஆதார் சேவைக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வந்தது. இந்த தடை, அடுத்த அறிவிப்பு வரும் வரை தொடரும் என்று அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x