Published : 11 Dec 2021 03:09 AM
Last Updated : 11 Dec 2021 03:09 AM

கிருஷ்ணகிரியில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் :

கிருஷ்ணகிரியில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் பிப். 4-ம் தேதி நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியதாரர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் பிப்ரவரி மாதம் 4-ம் தேதி காலை 10.30 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்துக்கு ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகிக்கிறார். மேலும், ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்துக்கு சென்னை ஓய்வூதிய இயக்குநர் வருகை தருகிறார். எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஓய்வூதியம் தொடர்பான மனுக் களை இரட்டை பிரதியில் வரும் 31-ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x