Published : 04 Dec 2021 03:09 AM
Last Updated : 04 Dec 2021 03:09 AM

கடலூர், புதுச்சேரியில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் :

புதுச்சேரி: வங்க கடலில் அந்தமான் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி ‘ஜோவத்’ புயலாகியுள்ளது. இதையடுத்து புதுச்சேரி, காரைக்காலில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

இப்புயல் வரும் 4-ம் தேதி தெற்கு ஒடிசா கடற்கரையை நெருங்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் விரைவில் கரைக்கு திரும்ப வேண்டும். 4-ம் தேதி வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என புதுவை மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையே, கடலூரிலும் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x