Published : 04 Dec 2021 03:09 AM
Last Updated : 04 Dec 2021 03:09 AM

புதுவை பெரிய மார்க்கெட் வியாபாரிகள் சாலை மறியல் :

புதுவை பெரிய மார்க்கெட் பின்புறம் ரங்கப்பிள்ளை வீதியில் பழமையான கட்டிடம் இருந்தது. தொடர் மழை காரணமாக கடந்த வாரம் பாதி கட்டிடம் இடிந்து விழுந்தது. பாதுகாப்பு கருதி மார்க்கெட்டின் பின்புறக் கதவை நகராட்சி அதிகாரிகள் பூட்டியுள்ளனர். 4 நாட்களுக்கு முன் இந்தக் கட்டிடம் முழுமையாக இடிக்கப்பட்டது. இருப்பினும் பூட்டப்பட்ட கதவு திறக்கப்படவில்லை. இதனால் அங்கு கடை வைத்திருந்த நடைபாதை வியாபாரிகள் நேற்று திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கெனவே காய்கறிகளின் விலை உயர்ந்துள்ள நிலையில் மார்க்கெட் பின்வாசலை பூட்டியுள்ளதால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக பின்பக்க கதவை திறக்க வேண்டும் என வலியுறுத்தி வியாபாரிகள் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ரங்கப்பிள்ளை வீதியில் பதட்டம் நிலவியது.

போக்குவரத்து போலீஸார் அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x